search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள்"

    டெல்லி தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பான விவரங்களை காவல்துறை ஊடகங்களுக்கு வெளியிடுவதற்கு தடை கோரி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #DelhiChiefSecretary #AAPMLAs
    புதுடெல்லி:

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அமனாதுல்லா கான் மற்றும் பிரகாஷ் ஜார்வால் தாக்கியதாக புகார் எழுந்தது.

    தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் துணை நிலை ஆளுநரைச் சந்தித்து புகாரளித்தார். இதனை அடுத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ் ஜார்வா, அமனாதுல்லா கானை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் போலீசார், பாட்டியாலா கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

    இதையடுத்து குற்றப்பத்திரிகை விவரங்களை ஊடகங்களுக்கு காவல்துறை தெரிவிப்பதை தடுக்கக் கோரி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பாட்டியாலா கோர்ட்டில் தனியாக மனு தாக்கல் செய்தனர்.


    இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆம் ஆத்மி தலைவர்கள் காவல்துறையினரைப் பற்றி மோசமாக பேசுவதாகவும், காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்கும் வகையிலும் நடந்துகொள்வதாகவும் காவல்துறை குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி கட்சி வழக்கறிஞர் மறுத்தார். வழக்கு விவரங்களை ஊடகங்களுக்கு தெரிவித்து அவமதிப்பதாக தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம் பிற்பகல் 2 மணிக்கு முடிவு செய்வதாக கூறினார்.

    பிற்பகல் 2 மணிக்கு விசாரணை நடைபெற்றபோது, காவல்துறைக்கு எதிராக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன், வரும் செப்டம்பர் 18-ம் தேதி குற்றப்பத்திரிகை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தது. #DelhiChiefSecretary #AAPMLAs
    பொது இடங்களில் சி.சி.டி.வி. திட்டத்துக்கு அனுமதி வழங்க மறுக்கும் டெல்லி கவர்னர் மாளிகைக்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் வரும் திங்கட்கிழமை பேரணியாக செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ArvindKejriwal #CCTVCamera #Kejriwal #AAPMLAs
    புதுடெல்லி:

    பெண்களின் பாதுகாப்பு கருதி டெல்லி முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஆளும் ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு கவர்னர் அனில் பைஜால் ஒத்துழைப்பு வழங்காமல் காலம்தாழ்த்தி வருகிறார். 

    இந்நிலையில், பொது இடங்களில் சி.சி.டி.வி. திட்டத்துக்கு அனுமதி வழங்க மறுக்கும் டெல்லி கவர்னர் மாளிகைக்கு வரும் திங்கட்கிழமை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரணியாக செல்லப் போவதாக டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா இன்று அறிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா, ‘டெல்லி முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் திட்டம் தொடர்பான முதல்கட்ட பணிகள் கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

    இதற்கான டெண்டரும் விடப்பட்ட பின்னர் தற்போது இந்த திட்டத்தில் ஓட்டை கண்டிபிடித்து முடக்கிப்போட முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக, கவர்னர் அனில் பைஜாலை சந்தித்து வலியுறுத்துவதற்காக வரும் திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகைக்கு பேரணியாக செல்கின்றனர்.

    இந்த தகவல் கடிதம் மூலம் கவர்னருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார். #ArvindKejriwal #CCTVCamera #Kejriwal #AAPMLAs
    ×